Monday, May 21, 2012

dust



Its just like from an alien movie be very careful when u get caught with dust...as following pics will show effects of bad dust to a person...

While he was walking he felt an eye irritation, thinking that it was just regualr dust, he started to rub his eye, in an effort to remove the dust.... then his eyes got really red, and he went and bought some eye drops from a pharmacy.... few days passed n his eyes were still red and seems a little swollen.

Again he dismissed it as the constant rubbing and that it will go away. The days go by the swelling of his eye got worse, redder and bigger.... till he decided to go and see a doctor for a check up.

The doctor immediately wanted an operation, being afraid of a tumor growth or cyst. At the operation, what was thought to be a growth or cyst, actually turned out to be a live worm..... what was thought initially to be just mere dust actually was an insect's egg......because of that, my friends, if u do get caught in dust, and the pain persists, pls go see a doctor immediately...... 

Monday, May 14, 2012

ஹார்ட்டுக்கும் தர்பூசணி

வெயிலுக்கு மட்டுமல்ல.. ஹார்ட்டுக்கும் தர்பூசணி ஜில்ஜில்
 
தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் எல்லாரது உச்சி மண்டையும் சுர்ரென்கிறது. இளநீர், நுங்கு போன்றவை அதிகம் விற்பனையாகின்றன. பளிச்சென்ற பச்சை & சிவப்பு கெட்டப்பில் தர்பூசணியும் தெருவுக்கு தெரு குவிந்து கவர்ந்திழுக்கிறது. மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. சி வைட்டமினும் அதிகம் இருக்கிறது.
இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கால்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். உயர் ரத்த அழுத்தம் உள்ள சிலர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இரு குரூப்பாக பிரிக்கப்பட்டனர். ஒரு குரூப்பினர் தினமும் ஒரு மாத்திரை சாப்பிட்டனர். 2 வது குரூப்புக்கு டம்மி மாத்திரை கொடுக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டது. ‘தர்பூசணி மாத்திரை’ சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது.
‘மாரடைப்பு, ஸ்டிரோக் ஏற்பட மிக முக்கிய காரணம் அதிக ரத்த அழுத்தம்தான். தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது. இதனால், உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப வேண்டிய இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே, இதயம் நீண்ட காலம் மக்கர் செய்யாமல் இயங்கும்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Monday, May 7, 2012

கூல் வாட்டர் வேண்டாமே!

 தண்ணீர் நிறைய குடிங்க!

கோடைக்காலத்தில் உடலில் இருக்கும் நீரானது வியர்வை, சிறுநீர் ஆகிய பல்வேறு வகையில் விரைவில் வெளியேறுகிறது. அதனால், உடலில் இருக்க வேண்டிய நீரை சமப்படுத்த அதிக தாகம் ஏற்படுகிறது. 

குளிர்காலத்தில் நமது தசைகள் சுருங்கிவிடுவதால் தாகம் எடுப்பது குறைகிறது. கோடைகாலத்தில் இது எதிர் மாறாக செயல்பட்டு உடனே நீரைக் குடிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 

நாம் கோடைக்காலங்களில் எவ்வளவு நீரைக் குடித்தாலும் நல்லதுதான். தேவையற்ற நீரை உடலே வெளியேற்றிவிடும்.

வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் வந்த உடனே தண்ணீரைக் குடிக்காமல் நமது உடல் வீட்டின் உள் வெப்ப நிலைக்கு சமநிலை அடைந்ததும் நீரைக் குடிக்க வேண்டும். அப்போதுதான் வேறு ஏதும் பிரச்னைகள் ஏற்படாது. அதிக நீர் குடியுங்கள்... சிறுநீரகத்தின் வேலையை எளிதாக்குங்கள்.

தண்ணீரை கொதிக்க வைத்து பின்பு குளிர வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. 


*இப்போதெல்லாம் கிராமத்திலும்,ந கர்புறங்களிலும் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட து. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின்எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது . காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.
*இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்க ள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்`சாப்பிட ்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.
*இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்க ள் டாக்டர்கள்.
*இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறா ர்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
*சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.
*உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி கூல் வாட்டரை பயன்படுத்த யோசிப்பீங்க தானே?